ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Friday 23 October 2015

மறைக்கப்பட்ட உலகம் - வெங்கட் சாமிநாதன்

இந்தக் கட்டுரை திண்ணையில் வெளியானது. 

நிறுவனப் போராளிகள், சான்றளிக்கப்பட்ட எழுத்தாளர்கள், கட்சிகள், குழுக்கள் சார்ந்த எழுத்துத் தொண்டர்கள் உண்மையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதை எந்தப் பூச்சும் இன்றிச் சொல்லியிருக்கிறார் மறைந்த வெங்கட் சாமிநாதன் அவர்கள். உண்மை கசக்கும் என்பதை அவருக்கு இருந்த எதிர்ப்பின் வீச்சில் கண்டு கொள்ளலாம். அஞ்சலிக் கட்டுரைகளிலும் ஊடகங்கள் வஞ்சனை செய்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் எழுதி அரசியல் சரித்தன்மையை உறுதி செய்யும் இந்தப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தவர் வெங்கட் சாமிநாதன். அவருக்கு நம் உளமார்ந்த அஞ்சலிகள்.