ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday 4 April 2013

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1

முகநூலில் Enlightened Master அவர்கள் எழுதிய அற்புதமான தொடர். என் வலைப்பூவில் வெளியிடுவதில் பெருமிதமே.

நம் தேசத்தையும் கலாசாரத்தையும் பிரித்து ஒற்றுமையைப் பிளக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த சதிகளும் அதற்குப் பலியான நம் முன்னோர்களின் அறியாமையையும் ஆராய்ந்து நாம் விழிப்படைய ஏதுவாக விளக்கங்கள் தரும் வியாசம் இது,.

ஒரு மதத்தை தினிப்பதால் எப்படி ஆளுமை உண்டாகும் ?

மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல ? அது ஒருவர் தன் மண்ணின் மீதும், தன் வேர்கள் மீதும் கொண்ட பற்று. ஒருவரை ஆப்ரகாமிய மதங்கள் பற்றுகையில் அவர்கள் தங்கள் வழிபாட்டு முறையை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை, தங்கள் வேர்களை விட்டு விலகுகிறார்கள். தங்கள் மூதாதையர்களை முட்டாள்கள் எனநினைக்கிறார்கள். தங்கள் மண்ணையே இரண்டாம் பட்சமாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் புனித நகரங்கள் திடீரென எங்கோ எல்லைதாண்டி இடம்பெயர்கின்றன. எங்கோ இருக்கும் பழக்க வழக்கங்களை உள்வாங்குகிறார்கள். சுருக்கமாய் சொன்னால், உங்கள் மூளையில் உள்ள பதிவுகளை அழித்துவிட்டு புதிய பதிவுகளை இடுவதற்கு அது சமமாகிறது.

வெள்ளைக்காரன் இந்தியாவை ஆட்சி செய்தாலும், மக்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. வெளையனால் இந்தியர்களின் நிலத்தை பிடிக்க முடிந்ததே தவிர அவர்களின் மனதை பிடிக்க முடியவில்லை. இது பிரிட்டீஷ் பாராளுமன்றத்திலும் எதிரொளித்தது. கலாச்சார ரீதியாக நாம் என்று இந்தியாவை ஆளுமை செலுத்த தொடங்குகிறோமோ, அன்றுதான் இந்தியாவை ஆள்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று பலர் உரக்க சொன்னார்கள். அதை எப்படி செய்யலாம் என்று ஆராயப்பட்டது.





ஐரோப்பியர்கள் ஒரு நாட்டை காலணியாக்கி கொள்வதற்கு இரண்டு படிகளில் செய்வார்கள். முதல் படி, ஆயுதங்களை கொண்டும், அங்குள்ள அரசர்களையோ, குழுக்களையோ ஒருவொருக்கு ஒருவர் மோத வைத்து, ஒருவருக்கு ஆயுதம் வழங்கி மற்றவரை ஒழித்து, பின்னர் உதவிய முதலாமவ‌ரையும் ஒழித்து காலணியை பெருக்குவார்கள். மக்களில் தங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு வசதிகளை செய்துக் கொடுப்பார்கள். ஏற்காதவர்களை வறுமையில் திண்டாட வைப்பார்கள்.

இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பியாவிலிருந்து "மிஷநரி" குழுக்கள் பிடிப்பட்ட நாட்டை நோக்கி செல்ல தொடங்கும்.

கிறிஸ்துவ பிரச்சாரத்தை பெரும் பொருட்செல்வோடு செய்யத் தொடங்கும். ஏற்கனவே வறுமையின் பிடியால் செய்வது அறியாது துடிக்கும் மக்களை இவர்கள் அனுகுவார்கள். "யேசுவை வணங்கத் தொடங்கினால் உங்கள் வறுமை விலகும்" என்று சொல்லி அவர்களுக்கு உதவி புரிய தொடங்குவார்கள். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று இருக்கும் மக்களுக்கு வேறு வழி இல்லையே ? தங்களின் ஆயிரக்கணக்கான வருட வேர்களை அழித்துக் கொண்டு, கிறிஸ்துவத்துக்கு மாறுவார்கள். இப்படித்தான் தென் அமேரிக்க நாடுகள், தெற்கு ஆப்ரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ், கிழக்கு ஐரோப்பியா, மற்றும் பல சின்னச்சிறிய நாடுகள் மற்றும் தீவுகளில் இவர்கள் முழு ஆளுமையை உண்டாக்கினர்.

இந்தியாவோ மிகப்பெரும் நாகரீகங்களையும், தொண்மையும் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் எழுநூறு வருட இஸ்லாமிய படையெடுப்பாலும், ஆட்சியாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஊரும், தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ள சிறு குழுக்களாக இயற்கையாக அமைந்தனர். அந்நியர் வசம் தம் மக்களை இழக்க விரும்பாத ஒவ்வொரு குழுவும் ஒரு "நெட்வர்க்கை" போல செயல்பட்டது. ஆட்சி அந்நியர் வசம் இருப்பதாலும், தொடர்பு கொள்ளும் வசதி இன்று போல் இல்லாததாலும் ஒவ்வொரு குழுக்களும் மேலும் உள்முகமாக திருப்பியது. அந்நியனின் ஆக்கிரமிப்பு தங்களை பாதிக்காதவாறு தங்கள் வேர்களை காத்துக்கொள்ள இந்த ஜாதிக் குழுக்கள் மிகவும் பயன்பட்டன. இந்த ஜாதிக்குழுக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைய ஹிந்து தர்மமே கேள்வி குறியாக இருந்திருக்கலாம். ஆக இந்த சிறு சிறு ஜாதிக் குழுக்கள் ஹிந்து அல்லது சனாதன தர்மம் என்று சொல்லப்படுகிற ஆலமரத்தின் விழுதுகளாக செயல்பட்டன.

இந்த ஆலமரத்தினை எப்படி சாய்ப்பது என்று யோசித்தார்கள் வெள்ளையர்கள்.

எப்படி அரசர்களை பிரித்து சிறிய படையை கொண்டு நாட்டை பிடித்தார்களோ அதைப் போல மக்களை பிரிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ள செய்ய வேண்டும். ஹிந்துக்களை உடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதிலீடு செய்துவிட்ட இவாண்ஜலிஸ்டுகள் (யேசுவை விற்று பிழைப்பு நடத்துவர்கள்) கடுமையாய் யோசிக்க தொடங்கினர்.

அவர்கள் கண்களுக்கு இந்தியரில் உள்ள நிற வேற்றுமை புலப்பட்டது. சீதோஷ்ண மற்றும் பழக்க வழக்கங்களால் இந்தியர்கள் பல நிறங்களில் இருந்தார்கள். சிலர் வெள்ளையாய் இருப்பதும், சிலர் மாநிறமாய் இருப்பது, சிலர் கறுப்பாக இருப்பதும் தெரிந்தது. வெள்ளையர்களை அந்நியன் என்று இந்தியர்கள் நிராகரிப்பதால், அவர்கள் மதத்தையும் அந்நிய மதம் என்று நிராகரித்தார்கள். தங்கள் வேர்களை விட்டு அசையாமல் இருந்த இந்தியரை, தங்கள் வேர்களையே அந்நியமாக சித்தரித்தால் என்ன என்று யோசித்தார்கள்.

அந்த மிகப்பெரும் சூழ்ச்சியினாலும், நயவஞ்சகத்தாலும் பிறந்ததுதான் "ஆரிய படையெடுப்பு" சித்தாந்தம்.

No comments: